பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.07.2026) ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில், சுமார் ₹14,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அவ்விடத்திற்கு வருகை தந்தபோது “இது ஒரு சாதாரண பூமி அல்ல; இது வரலாறு, வீரம், மதம், அளவற்ற பெருமை நிறைந்த ஒரு பூமி,” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் ஒட்டுமொத்த மாநிலமும் முன்னேற்றத்தின் ஒரு புதிய பாதையில் உறுதியாகப் பயணித்து வருவதை சுட்டிக் காட்டிய அவர், இன்றைய நிகழ்வுகள் இந்த லட்சியத்திற்கு சக்திவாய்ந்த புதிய உத்வேகத்தை அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். இன்றைய நிகழ்ச்சி, அரசின் லட்சியத்திற்கு முற்றிலும் புதிய ஆற்றலை நிரப்புகிறது என்று அவர் கூறினார்.
இப்பகுதியின் பெயர் இப்போது வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது என்று கூறிய பிரதமர், நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் தொடங்கப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டார். மேம்பட்ட பசுமைப் போக்குவரத்து குறித்து விவாதிக்கப்படும் போதெல்லாம், வருங்கால சந்ததியினர் இந்த வழித்தடத்தை அழியாத புகழடையச் செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் தொடர்பான இந்த மகத்தான சாதனைக்கு அனைவருக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் வாழ்த்துகள் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
மாபெரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை விவரித்த பிரதமர், மாநிலத்தின் நலனுக்காக நேரடியாக அர்ப்பணிக்கப்பட்ட ரயில்வே, நெடுஞ்சாலைகள், கலாச்சார பாரம்பரியம் சார்ந்த ₹14,000 கோடிக்கும் அதிகமான புதிய திட்டங்களைப் பட்டியலிட்டார். மருத்துவத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குப் புத்தம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், பிவானியில் பண்டிட் நேகி ராம் சர்மா மருத்துவக் கல்லூரி, நார்னாலில் மகரிஷி சியவன் மருத்துவக் கல்லூரியுடன் ராவ் துலாராம் மருத்துவமனை ஆகியவற்றை அர்ப்பணிப்பதாக கூறினார். இந்த புதிய நிறுவனங்கள் ஹரியானாவின் சுகாதார சேவைகளை மேலும் வலுவூட்டி, எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய ரயில்வே துறையின் தொழில்நுட்பப் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசிய பிரதமர், 19-ம் நூற்றாண்டு நீராவி இயந்திரங்களால் அடிப்படையாக வரையறுக்கப்பட்டதையும், 20-ம் நூற்றாண்டு மின்சக்தியால் வரையறுக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். எதிர்காலத்தைப் பற்றிப் பேசிய அவர், 21-ம் நூற்றாண்டு ஹைட்ரஜன் போக்குவரத்தால் இயக்கப்படும் என்று கூறினார்.
நாட்டின் சாதனையை உலகளாவிய கண்ணோட்டத்தில் பேசிய பிரதமர், ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் உலகளவில் 7, 8 ஆண்டுகளுக்கு முன்புதான் நடைமுறைக்கு வந்தது என்று குறிப்பிட்டார். தற்போது மிகச் சில நாடுகள் மட்டுமே இத்தகைய ரயில்களை இயக்கும் திறனைக் கொண்டுள்ளன என்றும், அவையும் கூட ஆரம்பகட்டத்திலேயே உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில், உலகில் அதன் வகையில் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், இது 3,200 குதிரைத்திறன் என்ற மகத்தான ஆற்றலையும் பத்து பெட்டிகளையும் கொண்டுள்ளது என்றும் விவரித்தார். பொதுவாக மூன்று முதல் நான்கு பெட்டிகளை மட்டுமே கொண்டிருக்கும் சர்வதேச ரயில்களுடன் இதை ஒப்பிட்டுப் பேசிய அவர், தனது முதல் முயற்சியிலேயே நாடு அடைந்துள்ள சிறந்த செயல்பாட்டைப் பெருமையுடன் எடுத்துரைத்தார்.
முற்றிலும் புகையற்ற இந்த ரயில், உள்நாட்டு உற்பத்தி முயற்சியின் மகத்தான, உறுதியான வெற்றி என்று பிரதமர் கூறினார். “இது ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் மிகவும் வெற்றிகரமான, பெருமைக்குரிய எடுத்துக்காட்டாகும்,” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குத் தான் சமீபத்தில் மேற்கொண்ட மிகவும் வெற்றிகரமான பயணங்களை நினைவுகூர்ந்த பிரதமர், நாடு மேற்கொண்டுள்ள ஏராளமான சர்வதேச இருதரப்பு ஒப்பந்தங்களை எடுத்துரைத்தார்.
வெளிநாட்டு அரசுகளுடன் நடத்தப்பட்ட உத்திசார் உரையாடல்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
தமது உரையை நிறைவு செய்த பிரதமர், வேளாண்மை, தொழில் ஆகிய இரட்டைப் பொருளாதாரச் சக்கரங்களால் சமமாக இயக்கப்படும் ஒரு விரைவான வளர்ச்சிப் பாதையில் ஹரியானா மாநிலம் பயணிப்பதாக விவரித்தார். இந்த வேகத்தை மேலும் பெருமளவில் முடுக்கிவிடும் வகையில் புதிதாகத் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள. அமையும் என்று திரு நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285702®=3&lang=1
(Release ID : 2285702)
****
TV/PLM/SH
Happy to be in Jind. Speaking at the launch of projects that strengthen clean mobility, connectivity, healthcare and cultural heritage. Together, they will improve 'Ease of Living' and accelerate Haryana's development. https://t.co/6DwHX6g4gF
— Narendra Modi (@narendramodi) July 17, 2026
India gets its first hydrogen train. pic.twitter.com/Ep7dZJZa0q
— PMO India (@PMOIndia) July 17, 2026
Connectivity not only enhances convenience but also multiplies the pace of development. pic.twitter.com/g4SaJoCIEl
— PMO India (@PMOIndia) July 17, 2026
Building a stronger sporting ecosystem. pic.twitter.com/W0i1KCPHfm
— PMO India (@PMOIndia) July 17, 2026