Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மோடியுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தொலைபேசி மூலம் உரையாடல் – பத்தான்கோட் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.


ஆப்கானிஸ்தான் அதிபர் திரு. அஷ்ரப் கனி பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். பதன்கோட்டில் நடந்த எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு திரு. கனி கண்டனம் தெறிவித்தார். மேலும், இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்களிக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மசர்-ஈ-ஷரீபில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார். இந்தியாவில், பூகம்பத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பொருள் இழப்புகளை ஈடுசெய்ய தேவையான அனைத்து உதவிகளையும் ஆப்கானிஸ்தான் அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்கு பூகம்ப நிவாரணத்திற்கு உதவி அளிக்க முன்வந்த அதிபர் கனிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மசர்-ஈ-ஷரீபில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதில்தாக்குதல் அளித்து இந்திய தூதரகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்த இந்திய ஆப்கான் தேசிய பாதுகாப்பு படைக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைக் கூறினார். ஆப்கான் மக்களுடன் இந்தியா என்றும் துணை நிற்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.