Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புவனேஷ்வர் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார்

புவனேஷ்வர் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார்

புவனேஷ்வர் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார்

புவனேஷ்வர் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார்


புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது :

ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் அவசியமானவை. இந்திய விண்வெளித் திட்டம் சாதாரணமாகத் துவங்கப்பட்டது. இப்பொழுது மொத்த உலகமும் அதனை கவனித்துக் கொண்டு வருகிறது. இதைப் போல் இளைய விஞ்ஞானிகள் சாதிக்க வேண்டும் என்ற ஊக்குவிப்புடன் மக்களுக்காக பணிபுரிய வேண்டும். மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பது மிகவும் அவசியமாகும்.

அறிவியல் நிறுவனங்களுக்கிடையே புதிய கண்டுபிடிப்புகளுக்கான சுற்றுச் சூழல் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒடிசாவில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிலக்கரியிலிருந்து எரிவாயு தயாரிப்பு, தூய்மையான எரிசக்தி, கடல்வழிப் பொருளாதாரம், 2022 – க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன.

தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை புதுப்பிக்கக் கூடிய எரிசக்தியை மட்டுமே பயன்படுத்தும் இந்தியாவின் பசுமையான வளாகமாகவும் மாசற்ற, மாசு வெளிப்படுத்தாத வளாகமாகவும் மாற்ற வேண்டும் இவ்வாறு பிரதமர் கூறினார்..