பி.எம்.இந்தியா
மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 8வது சுற்று ஊதிய பேச்சுவார்த்தைக்கான ஊதிய கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறப்புகள்:
iii. மறுகட்டமைப்பு/மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மத்திய பொது துறை நிறுவனங்களுக்கு ஊதிய திருத்தம் மறுகட்டுமான/மறுசீரமைப்பு திட்ட ஒப்புதல்களில் கூறப்பட்டுள்ளது போல இருக்க வேண்டும்
vii. பேச்சுகளுக்கு பின்னர் ஊதியங்கள் உயர்த்தப்பட்டால் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது சரக்குகள் மற்றும் சேவைக்கான கட்டணங்களை உயர்த்தக் கூடாது
viii. ஊதிய உயர்வானது உற்பத்திக்கான தொழிலாளர் செலவில் உயர்வு இல்லை என்ற நிபந்தனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். விதி விலக்காக குறைந்த திறனுடன் செயல்பட்டு வரும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் நிர்வாக அமைச்சகம்/துறை துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு டி.பி.இ. உடன் பேசலாம்.
பின்னணி:
நாட்டில் உள்ள 320 மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் 12.34 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 2.99 லட்சம் பணியாளர்கள் வாரிய மட்டம் மற்றும் வாரிய வட்டத்திற்கு கீழான நிர்வாகிகள் மற்றும் யூனியன் படுத்தப்படாத மேற்பார்வையாளர்கள். எஞ்சிய 9.35 லட்சம் பணியாளர்கள் யூனியனுக்கு உட்பட்ட பணியாளர்கள். யூனியனுக்கு உட்பட்ட பணியாளர்களின் ஊதிய திருத்தம் தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகங்களால் முடிவு செய்யப்படுகிறது. ஊதிய உயர்வுக்கான பேச்சுகளுக்கான வழிகாட்டுதல்களை பொதுத் துறை நிறுவனங்கள் துறை வெளியிடுகிறது.
***