பி.எம்.இந்தியா
பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் மியான்மர் இடையே பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் கூட்டுறவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான தனது ஒப்புதலை வழங்கியது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மியான்மரில் ஆயுஷ்/பராம்பரிய மருத்துவ முறைகளின் வளர்ச்சிக்கு இருநாடுகளுக்கு இடையேயான கூட்டுறவிற்கான நடைமுறைகளை அளிக்கும். இது ஆயுஷ் மருத்துவ அமைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் நிலைபெற செய்தலுக்கு ஊக்கமளிக்கும்.