Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முத்தலாக் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிரதமர் வரவேற்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி, முத்தலாக் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ளார். இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், இது இசுலாமியப் பெண்களுக்கு சமத்துவத்தை அளிப்பதாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சக்திவாய்ந்த நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

“முத்தலாக் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இது இசுலாமியப் பெண்களுக்கு சமத்துவத்தை அளிக்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சக்திவாய்ந்த ஒரு நடவடிக்கை” என்றார் பிரதமர்.

****