பி.எம்.இந்தியா
வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையில் இந்தியாவுக்கும், வெளிநாட்டு ஒலி / ஒளிபரப்பாளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பயன்கள்:
1) அரசு ஒலி / ஒளிபரப்பு நிறுவனங்கள் புதிய பார்வைகளைப் பெறுதல்,
2) புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள புதிய உத்திகளை உருவாக்குதல்,
3) ஊடகத் தாராளமயம்,
4) உலகமயம் ஆகியவற்றுக்கு வெளிநாட்டு ஒலி / ஒளிபரப்பாளர்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உதவும்.
**************