Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்கேட்சாட்–1’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து.


‘ஸ்கேட்சாட்–1’ செயற்கை கோள் மற்றும் 7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி–35 ஏவுகணை செலுத்து வாகனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இந்தியா மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் அடையும் தருணம் இது. ‘ஸ்கேட்சாட்–1’ செயற்கை கோள் மற்றும் 7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி–35 ஏவுகணை செலுத்து வாகனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள்.

நமது விண்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து வரலாறு படைத்து வருகின்றனர். இவர்களின் இந்த சாதனை 125 கோடி இந்திய மக்களின் மனதை தொட்டுள்ளது. மேலும் உலக அரங்கில் இந்தியாவை பெருமை அடைய செய்துள்ளது.” என்று பிரதமர் கூறியுள்ளார்.