பி.எம்.இந்தியா

ஹால்வாரா விமான நிலையத்தில் முனையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பஞ்சாப் மக்களுக்கு, குறிப்பாக லுதியானா மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது என்று கூறியுள்ளார். வடக்கு இந்தியாவை துடிப்புமிக்க தொழில்துறை மற்றும் வணிகமையமாக லுதியானா விளங்குகிறது என்றும், இந்த நகருக்கு விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த அரசு அயராது பாடுபட்டு வருகிறது என்றும், நவீன விமான நிலையத்திற்காக நடைபெறும் பணிகள் இதில் எதிரொலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஹால்வாரா விமான நிலையத்தில் முனையக் கட்டடம் திறக்கப்பட்டிருப்பது, பஞ்சாப் மக்களுக்கு, குறிப்பாக லுதியானா மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். நாம் நன்கு அறிந்திருப்பது போல், வடக்கு இந்தியாவின் துடிப்புமிக்க தொழில்துறை மற்றும் வணிகமையமாக லுதியானா விளங்குகிறது. இந்த நகரம் அதன் ஆற்றல்மிக்க மக்களால் அறியப்பட்டதாகும். இந்த நகருக்கு விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த எங்கள் அரசு அயராது பாடுபட்டு வருகிறது என்பதை, நவீன விமான நிலையத்திற்காக நடைபெறும் பணிகள் எதிரொலிக்கின்றன.”
***
(Release ID: 2221811)
VJ/PKV/SMB/RJ/SE/SH
The inauguration of a terminal building at the Halwara Airport is a moment of immense joy for the people of Punjab, especially Ludhiana and surrounding areas. Ludhiana, as we all know, is a vital industrial and commercial hub in Northern India. This city is known for its dynamic… pic.twitter.com/Ff6SVUeBgt
— Narendra Modi (@narendramodi) February 1, 2026
ਹਲਵਾਰਾ ਹਵਾਈ ਅੱਡੇ 'ਤੇ ਟਰਮੀਨਲ ਇਮਾਰਤ ਦਾ ਉਦਘਾਟਨ ਪੰਜਾਬ ਦੇ ਲੋਕਾਂ, ਖ਼ਾਸ ਕਰਕੇ ਲੁਧਿਆਣਾ ਅਤੇ ਨਜ਼ਦੀਕੀ ਇਲਾਕਿਆਂ ਲਈ ਬੇਹੱਦ ਖ਼ੁਸ਼ੀ ਦਾ ਮੌਕਾ ਹੈ। ਜਿਵੇਂ ਕਿ ਅਸੀਂ ਸਾਰੇ ਜਾਣਦੇ ਹਾਂ, ਲੁਧਿਆਣਾ ਉੱਤਰੀ ਭਾਰਤ ਦਾ ਅਹਿਮ ਸਨਅਤੀ ਅਤੇ ਵਪਾਰਕ ਕੇਂਦਰ ਹੈ। ਇਹ ਸ਼ਹਿਰ ਆਪਣੇ ਉੱਦਮੀ ਲੋਕਾਂ ਕਰਕੇ ਜਾਣਿਆ ਜਾਂਦਾ ਹੈ। ਸਾਡੀ ਸਰਕਾਰ ਇਸ ਸ਼ਹਿਰ ਦਾ… pic.twitter.com/5pUZNIJpG7
— Narendra Modi (@narendramodi) February 1, 2026