பி.எம்.இந்தியா
புதுதில்லியில், ராஜ்பத் புல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள 1965 போரின் பொன் விழா ஆண்டை குறிக்கும் நினைவு கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.
நாட்டின் எல்லை பகுதிகளை பாதுகாத்து வரும் இராணுவ படை வீர்ர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் இது புகழ் அஞ்சலி செலுத்துவதாக அமைந்துள்ளது.
பல்வேறு போர்க்களங்களில் நிகழ்ந்த போர்க் காட்சிகளின் சித்தரிப்புகளையும், கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். 1965 போரில் பங்கேற்ற சில வீரர்களையும் அவர் சந்தித்தார். இராணுவம், கடற்படை மற்றும் விமான படையின் தளபதிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு மூத்த மத்திய அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.
1965ம் ஆண்டு நடைபெற்ற போரில் நமது படை வீரர்களின் வீரமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியரின் நினைவில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அவர்கள் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Watch: PM @narendramodi at Shauryanjali, a commemorative exhibition on Golden Jubilee of 1965 war. https://t.co/K8yHc3rr0R
— PMO India (@PMOIndia) September 17, 2015
At Shauryanjali, a commemorative exhibition on Golden Jubilee of 1965 war. pic.twitter.com/Qil3aUl7tb
— PMO India (@PMOIndia) September 17, 2015
Spent time at Shauryanjali, a commemorative exhibition on Golden Jubilee of 1965 war. Here are some glimpses. pic.twitter.com/oAZEoKtLOk
— Narendra Modi (@narendramodi) September 17, 2015
The valour & sacrifice of our armed forces during the 1965 war remains etched in the memory of every Indian. We are very proud of them.
— Narendra Modi (@narendramodi) September 17, 2015