Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக உயர் மட்ட குழுவை பிரதமர் அனுப்பினார்.


அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக இரு உறுப்பினர் கொண்ட உயர் மட்ட குழுவை பிரதமர் திரு. நரேந்திர மோடி உடனடியாக அருணாச்சல பிரதேசத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். மாநில மற்றும் நகர அலுவலர்களுடன் விவாதித்தபின் தேவையான மீட்பு மற்றும் நிவாரங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கூறியுள்ளார்.

இந்த இயற்கை சீற்றம் கடந்த வெள்ளிக்கிழமை (22.04.2016) அன்று ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கும ரூ. 50,000-மும் பிரதமர் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

***