பி.எம்.இந்தியா
வணக்கம்.
எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தின் இந்த பதிப்பில் கலந்துகொண்டு, பல தெரிந்த முகங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதத்தின் பிரகாசமான எதிர்காலம் குறித்து, குறிப்பாக ஒட்டுமொத்த உலகமும் பாரதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இந்த நேரத்தில், சிறப்பான விவாதங்கள் இங்கு நடந்துள்ளன என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
பாரதம் இன்று ஒரு தனித்துவமான வெற்றிக் கதையை உருவாக்கி வருகிறது. நமது சீர்திருத்தங்களின் தாக்கம் நமது பொருளாதாரத்தின் செயல்திறனில் தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், பாரதம் பெரும்பாலும் கணிப்புகள் மற்றும் அதன் சகாக்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. உதாரணமாக, கடந்த பத்து ஆண்டுகளில், உலகப் பொருளாதாரம் 35 சதவீதம் வளர்ந்துள்ளது. இருப்பினும், அதே காலகட்டத்தில், நம் பொருளாதாரம் கிட்டத்தட்ட 90 சதவீதம் விரிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்பது நமது தாரக மந்திரமாக இருந்து வருகிறது, நம்மை இயக்கும் சேவை உணர்வு பாரத மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தேசத்தின் சாதனைகளை அவர்கள் கண்டிருக்கிறார்கள், அதனால்தான் இன்று, பாரத மக்கள் புதிய நம்பிக்கையால் நிரப்பப்பட்டுள்ளனர். தங்களின் மீதும், நாட்டின் முன்னேற்றம் மீதும், நமது கொள்கைகள் மீதும், நமது முடிவுகள் மீதும், நமது நோக்கங்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய வாக்காளர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வழிவகை செய்துள்ளனர். பாரதத்தின் ஆர்வமுள்ள இளைஞர்களும் பெண்களும் தொடர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளனர்.
நண்பர்களே,
இன்று, பாரதத்தின் முன்னேற்றம் உலகளாவிய தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது. புள்ளிவிவரங்கள் முக்கியமானவை என்றாலும், மாற்றப்பட்டு வரும் வாழ்க்கையையும் கருத்தில் கொள்வது சமமாக முக்கியமானது. பாரதத்தின் எதிர்காலத்திற்கான திறவுகோல் இந்த மாற்றத்தில் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த தனிநபர்கள் வறுமையிலிருந்து வெளிவந்திருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தையும் உருவாக்கியுள்ளனர். இந்த மாற்றத்தின் வேகமும் அளவும் உலகெங்கிலும் உள்ள எந்தவொரு ஜனநாயக சமூகத்திலும் முன்னெப்போதும் இல்லாதது.
நண்பர்களே,
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, எங்கள் மூன்றாவது பதவிக்காலத்தில், அரசு மூன்று மடங்கு வேகத்தில் செயல்படும் என்று நான் கூறினேன். மூன்றாவது முறையாக அரசு அமைக்கப்பட்டு 100 நாட்கள் கூட ஆகவில்லை, இருப்பினும் இயல் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், சமூக உட்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் சீரான சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். கடந்த மூன்று மாதங்களில், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் நலனுக்காக நாங்கள் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்துள்ளோம். ஏழைகளுக்காக மூன்று கோடி புதிய வீடுகளை நாங்கள் அனுமதித்துள்ளோம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளோம், வேளாண் உள்கட்டமைப்பு நிதியை ரூ .1 லட்சம் கோடியாக விரிவுபடுத்தியுள்ளோம்,
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். நீங்களும் இந்த பயணத்தில் தீவிரமாக பங்கேற்க விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். பாரதத்தில் அதிகமான நிறுவனங்கள் உலகளாவிய பிராண்டுகளாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உலக அரங்கில் ஒவ்வொரு துறையிலும் பாரதம் முன்னிலை வகிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பாரதத்தை வளர்ந்த நாடாக மாற்றுவோம், ஏனென்றால் உலகின் வளம் பாரதத்தின் வளத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த இலக்கை நம்மால் அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050535
****
RB/DL
Speaking at the @EconomicTimes World Leaders Forum. #ETWLF https://t.co/D6UEyl46Ps
— Narendra Modi (@narendramodi) August 31, 2024
India has often outperformed both predictions and its peers. pic.twitter.com/S7vOvum5Tb
— PMO India (@PMOIndia) August 31, 2024
बीते वर्षों में भारतीयों के जीवन में हम बड़ा बदलाव लाने में सफल रहे हैं। हमारी सरकार ने भारत के करोड़ों-करोड़ नागरिकों के जीवन को छुआ है: PM @narendramodi pic.twitter.com/Ef4XWeCMeA
— PMO India (@PMOIndia) August 31, 2024
Today, India's progress is making global headlines. pic.twitter.com/ej3J6cNCkY
— PMO India (@PMOIndia) August 31, 2024
In the past decade, 25 crore people have risen out of poverty. This speed and scale are historic. pic.twitter.com/BizgHSrUrw
— PMO India (@PMOIndia) August 31, 2024
हमने गरीबों को Empower करने का रास्ता चुना।
— PMO India (@PMOIndia) August 31, 2024
हमने उनके रास्ते से बाधाएं हटाईं और उनके साथ खड़े हुए: PM @narendramodi pic.twitter.com/nMqrOyt26n
For us, infrastructure is a means to improve the convenience and ease of living for our citizens. pic.twitter.com/XfqrfxiB6o
— PMO India (@PMOIndia) August 31, 2024
21वीं सदी का ये तीसरा दशक, भारत के लिए लिफ्ट-ऑफ Decade जैसा है। pic.twitter.com/WjhEJGiprv
— PMO India (@PMOIndia) August 31, 2024
Making India a global manufacturing hub is an aspiration for every Indian and it is also a global expectation of India. pic.twitter.com/9YvNHaZCYW
— PMO India (@PMOIndia) August 31, 2024
To have at least one Made in India food product on every dining table around the world - this is our resolve. pic.twitter.com/15p4lEoCqw
— PMO India (@PMOIndia) August 31, 2024
We are shaping our policies not based on the past, but with an eye on the future. pic.twitter.com/YBsQzPHWjE
— PMO India (@PMOIndia) August 31, 2024
Today's India is a land of opportunities.
— PMO India (@PMOIndia) August 31, 2024
Today's India honours the wealth creators. pic.twitter.com/gat88IIIPC
A prosperous India can pave the way for global prosperity. pic.twitter.com/cI3Xz9Jw4e
— PMO India (@PMOIndia) August 31, 2024