பி.எம்.இந்தியா
மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கியில் இந்தியா உறுப்பு நாடாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
இ.பி.ஆர்.டி.யின் உறுப்பினராக தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சகத்தின் கீழான பொருளாதார விவகாரங்கள் துறை எடுக்கும்.
தாக்கம்:
நிதி தாக்கங்கள்:
இ.பி.ஆர்.டி.யில் உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச தொடக்க முதலீடு 1 மில்லியன் யூரோவாக இருக்கும். எனினும் உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச பங்குகளை (100) வாங்க வேண்டும் என்பதால் இது இந்தியாவின் முடிவைப் பொருத்தது. அதிக அளவு பங்குகளை வாங்கினால் நிதி தாக்கம் அதிகமாக இருக்கும். வங்கியில் இணைவதற்கான கொள்கை ஒப்புதல் அமைச்சரவையிடமிருந்து இந்த நிலையில் பெறப்பட்டுள்ளது.
பின்னணி:
ஐரோப்பிய மறுகட்டுமான மற்றும் வளர்ச்சி வங்கியில் உறுப்பினராவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நிலவும் உற்சாகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச அரசியல் நிலைப்பாடு காரணமாக பல அடுக்கு வளர்ச்சி வங்கிகளான உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, மற்றும் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கிகளுக்கு அப்பாற்பட்டு உலகளாவிய வளர்ச்சி நிலப்பரப்பில் இந்தியா விரிவடைய வேண்டும் என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் தான் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் இணையும் முடிவு எடுக்கப்பட்டது.
***