பி.எம்.இந்தியா
சர்தார் வல்லபபாய் படேல் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த தினத்தில் சர்தார் படேல் நாட்டுக்கு ஆற்றிய அருந்தொண்டினையும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்த அவரது போதனைகளையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
“சர்தார் படேல் நினைவு தினத்தன்று நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்த தருணத்தில் அவர் நாட்டுக்கு ஆற்றிய அருந்தொண்டினையும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்த அவரது போதனைகளையும் நாம் நினைவு கூறுவோம்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
On his Punya Tithi, salutations to Sardar Patel. We remember his exemplary service & are inspired by his message of unity & integration.
— Narendra Modi (@narendramodi) December 15, 2015