பி.எம்.இந்தியா
மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்துப் பிரதமர் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ₹2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து மிகுந்த துயரத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ₹2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ₹ 50,000 வழங்கப்படும்”.
***
(Release ID: 2234121)
TV/PLM/RK
The explosion at a factory in Nagpur, Maharashtra, is deeply distressing. My condolences to the families of the deceased. I pray for the speedy recovery of the injured. The local administration is assisting those affected.
— PMO India (@PMOIndia) March 1, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to…