Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரயில்வே மற்றும் சாலை துறை வளர்ச்சி – பிரதமர் ஆய்வு

ரயில்வே மற்றும் சாலை துறை வளர்ச்சி – பிரதமர் ஆய்வு


ரயில்வே மற்றும் சாலை துறையின் முக்கிய உள்கட்டமைப்பு வளர்ச்சி குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். ரயில்வே துறை ஆய்வின் போது, 2015-16-ம் ஆண்டு ரூ.93,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 65 சதவீதம் கூடுதலாகும். இதுவரையில் செய்யப்பட்ட முதலீடுகளில் இதுவே மிக அதிகமான முதலீடாகும். 2015-16-ம் ஆண்டில் 1780 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, 1730 கி.மீ தூரம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை வரலாற்றில் இந்த அளவீட்டில் சிறந்த செயல்பாட்டை இது குறிக்கிறது.

ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பை விரைவாக மேற்கொள்வதின் அவசியத்தை குறிப்பிட்ட பிரதமர், ரயில்வே துறை இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். ரயில்வே துறையை மேம்படுத்தவும் அதன் உள்கட்டமைப்புகளை பயன்படுத்தவும் பிரதமர் வலியுறுத்தினார். ஊரக பகுதிகளில், ரயில்வே அதன் உள்கட்டமைப்பை திறன் மேம்பாடு சம்பந்தமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம். இதனால் ரயில்வே துறைக்கு வருமானம் கிடைக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

சாலைத் துறைகளில் 2015-16ம் ஆண்டில் 6000 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலை பணி முடிக்கப்பட்டு 10,098 கி.மீ தூரத்திற்கான ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சாலை மேம்பாடு மாதிரிகளை கற்பதற்கான தேவையை குறிப்பிட்ட பிரதமர் அதில் சிறந்த முறையை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். இதன் மூலம் நெடுஞ்சாலை கட்டமைப்புத் துறையில் தனியார் முதலீடுகளை கொண்டுவர முடியும் என்றும் பிரதமர் கூறினார்.

மிக முக்கியமான பாதைகளில் நெரிசலை குறைப்பதற்கான அவசியத்தை குறிப்பிட்ட பிரதமர் சுங்கச்சாவடிகளில் வசூலிக்க சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.