Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ கட்டமைப்பதில் இளையோரின் பங்களிப்புக் குறித்தக் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்


மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். 

இந்தியாவின் கடந்த 12 ஆண்டுகால மாற்றம், இளைஞர்களின் கதையும் சேர்ந்ததாகும் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடனும் திறன் மேம்பாடு, புதுமை கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட முன்னெப்போதுமில்லாத அளவிலான முதலீட்டு ஆதரவுடனும் அமிர்த தலைமுறை எனப்படும் இளைஞர் தலைமுறையினர் தங்களுடைய விருப்பங்களை நனவாக்கவும் நாட்டைக் கட்டமைப்பதில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதையும் இது குறிப்பிடுகிறது.

மேலும், வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ கட்டமைப்பதில் இந்திய இளைஞர்களின் பங்களிப்புக் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“இந்தியாவின் கடந்த 12 ஆண்டுகால மாற்றம், இளைஞர்களின் கதையும் சேர்ந்ததாகும். நமது தொலைநோக்குப் பார்வை வழிகாட்டுதலுடனும் திறன் மேம்பாடு, புதுமை கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட முன்னெப்போதுமில்லாத அளவிலான முதலீட்டு ஆதரவுடனும் அமிர்த தலைமுறை எனப்படும் இளைஞர் தலைமுறையினர் தங்களுடைய விருப்பங்களை நனவாக்கவும் நாட்டைக் கட்டமைப்பதில் நாம் வாய்ப்புகள் உருவாக்குகிறோம்.

வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ கட்டமைப்பதில் இந்திய இளைஞர்களின் பங்களிப்புக் குறித்து மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள இக்கட்டுரையைப் படியுங்கள்.!”

***

(Release ID: 2274538

SS/IR/KPG/SH