Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காந்திநகரில் நடைபெற்ற கிராம பெண் தலைவர்கள் மாநாடு – தூய்மை சக்தி-2017-ல் பிரதமர் உரையாற்றினார்

காந்திநகரில் நடைபெற்ற கிராம பெண் தலைவர்கள் மாநாடு – தூய்மை சக்தி-2017-ல் பிரதமர் உரையாற்றினார்

காந்திநகரில் நடைபெற்ற கிராம பெண் தலைவர்கள் மாநாடு – தூய்மை சக்தி-2017-ல் பிரதமர் உரையாற்றினார்

காந்திநகரில் நடைபெற்ற கிராம பெண் தலைவர்கள் மாநாடு – தூய்மை சக்தி-2017-ல் பிரதமர் உரையாற்றினார்


காந்திநகரில் நடைபெற்ற கிராம பெண் தலைவர்கள் மாநாடு – தூய்மை சக்தி 2017-ல் பிரதமர் உரையாற்றினார்.

தூய்மை இந்தியா இயக்கத்திற்கு அயராது உழைத்த தலைவர்களை கவுரவிக்கும் வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அரசியல் சுதந்திரத்தைவிட தூய்மைதான் மிக முக்கியம் என்ற மாகாத்மா காந்தியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த பிரதமர் 2019-ல் நாம் மகாத்மா காந்தியின் 150 பிறந்த தினத்தை கொண்டாட உள்ளோம் என்பதை குறிப்பிட்டார்.

தூய்மை இயக்கத்தை நோக்கி தற்போது மக்களிடம் எழுந்துள்ள இந்த எழுச்சியும் உற்சாகமும் நிலைத்திருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தூய்மை என்பது நமது அன்றாட பழக்கமாக மாற வேண்டும் என்பதை பிரதமர் வலியுறித்தினார். நாம் அசுத்தத்தை முழுமையாக அழித்து தூய்மையை அடைகிறோமோ அன்று ஏழைகள் மிகவும் பயனடைவர் என்றார்.

இன்று கவரவிக்கப்படும் பெண்கள் பல மூடநம்பிக்கைகளை தகர்த்து எறிந்துள்ளனர். மேலும், எவ்வாறு நல்ல மாற்றங்கள் ஊரகங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன என்பதை அவர்கள் உலகிற்கு எடுத்துக் காட்டி உள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.

தான் கிராம பெண் தலைவர்களை பார்க்கும்போது நல்ல மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் காண்பதாகக் கூறிய பிரதமர் பெண் தலைவர்கள் தரமான மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறார்கள் என்று கூறினார்.

“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் பெண் தலைவர்கள் கொண்ட ஊரக பகுதிகள் பெண் சிசு கொலைகளை ஒழித்தலில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றார்.

பாரபட்சமான மனப்போக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய பிரதமர், பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் சரிசமமான கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தொழில்நுட்பம் கிராமப்புறங்களில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.

விருது பெற்றவர்களைப் பாராட்டிய பிரதமர் அவர்கள் மொத்த நாட்டிற்கும் தூண்டுகோலாகா திகழ்வாகவும் பிரதமர் கூறினார்.

****