பி.எம்.இந்தியா
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றியமைத்ததற்காக, பிரபல மலையாள இலக்கியவாதிகள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புகழ்பெற்ற மலையாள இலக்கியவாதிகளை வரவேற்பதில் தாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களுடனான கலந்துரையாடல் கருத்தாழமிக்கதாக இருந்தது என்று தெரிவித்தார். கேரளம் மற்றும் மலையாளம் மீதான இலக்கியவாதிகளின் தீவிர ஈடுபாட்டுடன் கூடிய அர்ப்பணிப்பை இந்த சந்திப்பு பிரதிபலித்ததாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றியமைத்ததற்காக நன்றி தெரிவிக்க வருகை தந்திருந்த புகழ்பெற்ற மலையாள இலக்கியவாதிகளின் குழுவை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தக் கலந்துரையாடல் கருத்தாழமிக்கதாக அமைந்ததுடன், கேரளம் மற்றும் மலையாளத்தின் மீதான அவர்களது அதீத ஈடுபாட்டுடன் கூடிய அர்ப்பணிப்பை இது பிரதிபலித்தது.”
***
(Release ID: 2233669)
TV/BR/RK
Very happy to receive a group of eminent Malayali litterateurs who came to express their gratitude for renaming Kerala to Keralam.
— Narendra Modi (@narendramodi) February 27, 2026
The interaction was extremely insightful and it reflected their passionate commitment to Keralam and Malayalam. pic.twitter.com/aAbdFZPTAr
സംസ്ഥാനത്തിൻ്റെ പേര് ‘കേരള’ എന്നതിൽനിന്ന് ‘കേരളം’ എന്ന് പുനർനാമകരണം ചെയ്തതിൽ നന്ദി അറിയിക്കാനെത്തിയ പ്രമുഖ മലയാളി സാഹിത്യകാരന്മാരുടെ സംഘത്തിന് ആതിഥ്യമരുളാൻ കഴിഞ്ഞതിൽ ഏറെ സന്തോഷമുണ്ട്.
— Narendra Modi (@narendramodi) February 27, 2026
അവരുമായുള്ള ആശയവിനിമയം അങ്ങേയറ്റം ഉൾക്കാഴ്ചയുള്ളതായിരുന്നു; കേരളത്തോടും മലയാളത്തോടുമുള്ള… pic.twitter.com/oVc4xahiZW